காலாவதியாகும் நிலையில் தடுப்பூசிகள்

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அதேசமயம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.